விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் சூட்டிங் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி படத்திற்கு பூஜை போடப்பட்டது.
முதல் கட்டமாக சென்னையிலும் இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவிலும் சூட்டிங் நடந்தது. இதில் சென்னையில் சூட்டிங் நடந்த போது, படத்தில் படகுகள் வைக்கப்பட்டு செட் போடப்பட்ட போட்டோக்கள் லீக் ஆனது.
இதற்கு முன்னர் படத்தின் போட்டோசூட் நடந்த போது விஜய் புகைபிடித்தது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் சூட்டிங் நடந்த போது ஒரு சண்டை காட்சியின் சில நொடி வீடியோ லீக் ஆனது.
அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இங்கும் விஜயின் ஒரு போட்டோ லீக் ஆகி உள்ளது. இதில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் தாடி வைத்தது போல் கோட் சூட் போட்டு மாஸாக உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.