தனது வருங்கால கணவரை அறிவித்த விஜய் சேதுபதி பட நாயகி. யாரு தெரியுமா ?

0
1319
- Advertisement -

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்த நிஹாரிகாவிற்கு திருமணம் என்ற செய்தி தான் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இவர் வேறு யாரும் இல்லை. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா.தெலுங்கு வட்டாரத்தில் இவர் ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளினியாக தான் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

-விளம்பரம்-

இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான். அதன் பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

- Advertisement -

மேலும், இவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் இவர் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார். சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது வருங்கால கணவர் பெயர் சைத்தன்யா. இவர் ஹைதராபாத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். குண்டூர் பகுதி ஐஜியின் மகன் தான் சைத்தன்யா என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் எப்போது என்பது எதுவும் இன்னும் முடிவாகவில்லை. அடுத்தாண்டு திருமணம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement