தமிழ் சினிமாவில் மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் வந்த வண்ணம் இருந்து வருகிறார்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா துவங்கி அனுபமா வரை அனைவரும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் கடந்த 2015 ஆம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்ட்டின். மலையாள படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனத்திலும் இடம்பிடித்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் ஷாக் ஆகி போய்யுள்ளார்கள்.
ப்ரேமம் படத்திற்கு பின்னர் தமிழில் விஜய் சேதுபதி நடத்த காதலும் கடந்து போகும் என்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மடோனா. அந்த படத்திற்கு பின்னர் கவண், பா பாண்டி, ஜூங்கா என்று ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் இவருக்கு விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இதுவரை அமையவில்லை. தமிழில் நிறைய வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : நடிகர் ராஜ்கிரணின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.
மேலும், இவர் தமிழில் அறிமுகமான போதே இவரை பெண் சத்யராஜ் என்று அனைவரும் கிண்டல் செய்து வந்தனர். ஏனெனில் இவர் பார்ப்பதற்கு சத்யராஜிற்கு பெண் வேடம் அணிந்து போலவே இருக்கிறார் என்று பலரும் கூறிவந்தனர். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார் மற்றும் ராதிகா நடித்து வரும் வானம் கொட்டட்டும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆனால், போதுமான பட வாய்ப்பில்லாத போதிலும் அம்மணி போட்டோ ஷூட் நடத்துவதை மட்டும் நிறுத்துவதே இல்லை. சமீபத்தில் இந்த நிலையில் நடிகை மடோனாவின் சில லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதில் முடிக்கும் கலர் அடித்துக்கொண்டு கொஞ்சம் லைட்டான கிளாமர் உடையில் இருக்கும் மடோனாவை பார்க்கும் போது மடோனாவா இப்படி மாறிட்டார் என்ற எண்ணம் தான் தொன்றுகிறது.