ஜெயிலர் படத்தை பார்த்து தலைவா என்று கத்திய எ.எல் விஜய் மகன் – எப்படி வளந்துட்டு இருக்காரே. வைரலாகும் வீடியோ

0
2076
ALVijay
- Advertisement -

ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு தலைவா என்று விஜய் மகன் கத்தி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், சமீப காலமாக ரஜினி நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.
படத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் மகன் வசந்த ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறார்.

ஜெயிலர் பட வில்லன்:

அப்போது சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகன் வசந்த ரவியை அந்த கும்பல் கொன்றுவிடுகிறார்கள். இதனால் அந்த கும்பலை பழிவாங்க ரஜினி கிளம்புகிறார். இறுதியில் என்ன ஆனது? ரஜினி தன் மகனை கொலை செய்த கும்பலை காவல்துறையிடம் ஒப்படைத்தாரா? பலி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம் விமர்சனம்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஜெயிலர் திரைப்படத்தை தனுஷ், திரிஷா, காளிதாஸ் ஜெயராம், கவின் உட்பட பல பிரபலங்கள் திரையரங்கில் நேரில் சென்று பார்த்து படத்தை பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் இயக்குனர் விஜயின் மகன் ஜெயிலர் படத்தை பார்த்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் மகன் செய்த செயல்:

அதாவது, தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் விஜய். இவர் திரையரங்கில் ஜெயிலர் படத்தை பார்க்க குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது படத்தை பார்த்துவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது விஜயின் மகன் தலைவா என்று காருக்குள் சத்தம் போட்டு காத்திருக்கிறார். இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விஜயின் மகனுக்கு தற்போது மூன்று வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement