விஜய் மகனுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் ? படத்தில் யார் நடிக்க போகிறார்கள் ? லைக்கா நிறுவனர் சொன்ன பதில்.

0
1261
Sanjay
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செயது. இருக்கிறது. ஆனால், இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன், சிரி, ‘Pull The Trigger’ என்ற சில குறும்படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து இருக்கிறது. . அதே போல லைகா நிறுவனத்தில் முதல் படமே விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் படமே இப்படி பிரம்மாண்ட பேனரில் விஜய் மகனுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ணி கோலிவுட் வட்டாராமே மிகந்த வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனது முதல் படம் குறித்து பேசியுள்ள விஜய்யின் மகன் ‘ லைகா நிறுவனத்தில் என்னுடைய முதல் படத்தை இயக்க இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய கதை பிடித்தது, எனக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம். எனக்கு உற்சாகத்தையும் பெரும் பொறுப்பையும் கொடுத்து, இந்த வாய்ப்பை சுபாஸ்கரன் சாருக்கு நன்றி. மேலும் எனது இயக்குனராகும் கனவை நினைவாக்க பெரும் ஆதரவை வழங்கிய தமிழ் குமரன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.அவர் மிகவும் எளிமையானவர் போல் தெரிகிறது ‘ என்று கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க விஜய் மகனை வைத்து படத்தை இயக்க முன்வந்த லைகா நிறுவனர் அளித்துள்ள பேட்டியில் ‘ இது ஒரு தனித்துவமான முன்மாதிரி கதை மற்றும் ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொண்டுள்ளது.அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, ​​அது சினிமா உணர்வைக் கொடுத்ததால் நாங்கள் முழு திருப்தி அடைந்தோம். அவர் திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். இது திரைப்படத் தயாரிப்பிற்கு இன்றியமையாத திறமையாகும்.

அவருடன் பணிபுரியும் அற்புதமான அனுபவத்திற்கு காத்துகொண்டு இருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், தொழில்துறையைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றும் கூறி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூட கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement