அதுக்கு ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி எல்லாம் தெரியாது – விஜய் பேச்சு.

0
597
vijay
- Advertisement -

வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தமிழ், மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாக ஏற்கனவே பிரச்சனை தொடங்கியது. பொங்கல் பண்டிகைகளில் தெலுங்கு படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

-விளம்பரம்-

வாரிசு சர்ச்சை :

பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான். மேலும், அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி இசை வகையில் விஜய் எதையாவது பேசிவிடுவார். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை இந்த விழா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் முத்தமிட்டபடி பேச தொடங்கினார் விஜய். இயக்குனர் வம்சி கதையா கேட்டாலே யாராக இருந்தாலும் நடிப்பதற்கு ஒத்துக்கொள்வார்கள்.

செல்லம்னு சொன்ன நியாபகம் வரும் :

இந்த படம் என்னுடைய நண்பன் நண்பிகள் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். பாடலாசிரியர் விவேக்குக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார் அதனை நீங்கள் இந்த படத்தில் பார்ப்பீர்கள். இசையமைப்பாளர் தமன் புல்லாங்குழல் வைத்து கூட ட்ரம்ஸ் வாசிப்பார் ஏனெற்றால அப்படித்தான் இசை இருந்தது. பொதுவாக வில்லன் யாராவதை சொல்லுங்கள் என்று கேட்டால் எல்லாரும் பல பேரை கூறுவார்கள் ஆனால் செல்லம்னு கேட்டால் முதலில் எல்லோருடைய மனதிற்கும் வருவது பிரகாஸ்ராஜ் தான். கில்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அவருடன் நடித்திருக்கிறேன். குஷ்பு மேடமை பார்த்தால் நண்பர்களுடன் சேர்ந்து சின்னத்தம்பி படத்தில் பார்த்த ஞாபகம் தான் வருகிறது.

-விளம்பரம்-

என்னை உருவாக்கிய உளிகள் :

ரத்தத்திற்கு மட்டும்தான் இந்த ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி அதோட ரொம்ப முக்கியமா என்ன மதம்! என்று தெரியாது. மனிதர்கள் தான் எல்லாவற்றிலும் பிரிவினையை பார்க்கிறோம். ரத்தமிடம் இருந்து அந்த தன்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் நான் ரசிகர்களின் மூலம் ரத்ததானத்தை ஊக்குவிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்னை உருவாக்கிய உளிகளான ரசிகர்களுக்கு என்று ரசிகர்களை கௌரவித்தார் விஜய்.

தேவையான விமர்சனம், தேவையற்ற எதிர்ப்பு :

மேலும் பிரச்சனை வருகிறது நம்மை எதிர்க்கிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். எப்போதுமே நமக்கு தேவையான ஒரு விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும் இருக்க வேண்டும் அப்போதுதான் அது நம்மை ஓட வைக்கும். ஒருவர் அவருடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு உங்களுடன் போட்டியிட ஒரு போட்டியாளர் வேண்டும், அது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

எனக்கும் ஒரு போட்டியாளர் 1992ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறார். அவர் வெற்றியாளராக இருந்ததினால்தான் நான் அவருடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறேன் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறிய தளபதி. Compete with Yourself, Be your own competition! என்று ரசிகர்களை ஊக்கு விக்கும் வகையில் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசியிருந்தார்.

Advertisement