பாடப்புத்தகத்தில் இது குறித்து இடம் பெற வேண்டும்! விழாவில் தன் ஆசையை பகிர்ந்த விஜய்- என்ன தெரியுமா?

0
2020
- Advertisement -

பாட புத்தகத்தில் இது இடம்பெற வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை என்று மேடையில் விஜய் பேசி இருக்கும் கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள்.

-விளம்பரம்-

இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து இருந்தது எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். அதோடு விஜய் அரசியல் வருவதற்காக தான் இப்படி விஜய் செய்கிறார் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதை விஜய் மக்கள் இயக்கத்தினரும் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

விஜய் அரசியல்:

தற்போது பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி மாணவர்களை நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை இன்று நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்ட்ரலில் நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் வழங்கிய ஊக்க தொகை:

அதோடு இந்த நிகழ்ச்சியில் பொதுவெளியில் பேனர், கட்டவுட்டுகள் வைக்கக்கூடாது என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என ஐந்தாயிரம் பேருக்கு காலை மற்றும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டு உள்ளது. இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வந்தார்கள். விஜய் மண்டபத்திற்கு மொபைல் போன் உள்ளே எடுத்து செல்ல அனுமதி மறுத்த நிலையில் ஸ்மார்ட் வாட்சையும் உள்ளே அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் மேடை போல் தயாராகி இருக்கும் இந்த விழாவில் விஜய்யின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் விஜய் சொன்னது:

மேலும், இந்த விழாவில் விஜய் அவர்கள் கூறியிருந்தது, நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்துவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நாமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் எதைச் சொல்கிறேன் என்றால் காசு வாங்கி ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும். ஒரு ஓட்டுக்காக ஆயிரம் ரூபாய் என்று ஒரு அரை லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் 15 கோடி செலவாகிறது. இவ்ளோ கோடி ஒருத்தர் செலவு செய்தால் அதற்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்து வைத்திருப்பார்.

விஜய் ஆசை குறித்து சொன்னது:

இதையெல்லாம் யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது என்று சொல்ல வேண்டும். உங்களால் மட்டும் தான் இதை மாற்ற முடியும். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற ஒவ்வொரு மாணவ மாணவிகளும் பெற்றோர்களிடம் இதை சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் தான் கண்டிப்பாக நடக்கும். நீங்கள் தான் அடுத்த ஆண்டு வரவுள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள். இது எப்போது நிகழ்கிறதோ அப்போதுதான் உங்களுடைய கல்வி முறை முழுமை அடையும். அது மட்டும் இல்லாமல் பாட புத்தகத்திலும் இது குறித்து இடம்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார். இப்படி விஜய் பேசி இருக்கும் கருத்துதான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement