பரியேறும் பெருமாள்…கதிருக்கு போன் செய்த தளபதி விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

0
1562
pariyerum-perumal
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும், படத்தின் வசனத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் சமூகவலைதள மக்கள். இந்த நிலையில், நடிகர் கதிருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இதுகுறித்து நடிகர் கதிரிடம் பேசினோம்.

-விளம்பரம்-

- Advertisement -

சினிமாவில் எப்போதும் என்னோட நலவிரும்பிகள் விஜய் சேதுபதி அண்ணா, அட்லி அண்ணா, புஷ்கர் காயத்ரி. ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி அண்ணாவிடம் கமிட் ஆகியிருக்கும் படங்கள் குறித்துப் பேசுவேன். ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து பலர் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், விஜய் அண்ணா வாழ்த்துவார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.

விஜய் அண்ணாவின் மேனேஜர் ஜெகதீஸ் அண்ணாவுக்கு போன் செய்த விஜய் அண்ணா, “என்ன.. ஜெகதீஷ், எங்கே பார்த்தாலும் ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்காக தம்பி கதிரை எல்லோரும் வாழ்த்துறாங்க”னு சொல்லியிருக்கார். அந்த நேரத்தில் நான் ஜெகதீஷ் அண்ணாகூட இருந்தேன். அவர் நான் அருகில் இருக்கும் தகவலை விஜய் அண்ணாகிட்ட சொன்னவுடனே, விஜய் அண்ணா என்னிடம் போனில் பேசினார். “வாழ்த்துகள் தம்பி. எங்கே பார்த்தாலும் உன் படத்தை பற்றிய பேச்சா இருக்கு.

-விளம்பரம்-

vijay actor

உன் நடிப்பையும் எல்லோரும் புகழ்றாங்க. பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்னும், நான் படம் பார்க்கல.. சீக்கிரம் பார்த்துட்டு போன் பண்றேன். வாழ்த்துகள்”னு சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. ஏன்னா, விஜய் அண்ணா இதுவரைக்கும் படங்கள் குறித்து என்கிட்ட பேசுனது இல்லை. முதல் முறையாக நான் நடித்த கேரக்டருக்காக வாழ்த்துனது பெரிய சந்தோஷம்”னு” மகிழ்ச்சியாகக் கூறினார் நடிகர் கதிர்.

Advertisement