தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் இதை சமீபகாலமாகவே இவரது படங்களில் அரசை எதிர்த்து பல்வேறு வசனங்கள் இருந்ததால் இவரது படங்கள் வெளியாகும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிரச்சனை தற்போது ஆரம்பித்தது கிடையாது தலைவா படத்தின் போதே நடிகர் விஜயின் படங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது.
தலைவா படத்திற்கு பின்னர்தான் விஜய்யின் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தது. இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று சமூக வலைதளத்தில் ‘ தலைவா டே’ என்ற ஹேஷ் டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், உண்மையில் தலைவா திரைப்படம் வெளியானது 2013 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தான்.
2013 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் வெளியாக காத்திருந்தது. ஆனால், சொன்ன தேதியில் தலைவா படம் வெளியாகவில்லை. தலைவா படம் வெளியானால், திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு வைப்போம் என்று கடிதம் வந்ததால் படம் வெளியாகவில்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் இதன் பின்னால் இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின.
குறிப்பாக தலைவா படத்தின் போஸ்டருக்கு கீழ் ‘Time To Lead’ என்ற வசனம் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. பின்னர் எப்படியோ விஜய் மற்றும் எஸ் ஏ சி, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை முடித்தனர். பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த சமயத்தில் தான் விஜய்க்கு அணில் விஜய் என்ற கேலிகள் குவிந்தது. அதற்கு காரணம் அவரது தந்தை எஸ் ஏ சி தான்.
2011 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் அவரை போயஸ் கார்டானில் விஜய் மற்றும் எஸ் ஏ சி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய எஸ் ஏ சி ராமாயணத்தில் ராமருக்கு அணில் உதவியது போல, அ தி மு க வெற்றிக்கு நாங்களும் அணில் போல உதவி செய்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். எஸ் ஏ சியின் இந்த பேட்டிக்கு பின்னர் தான் சமூக வலைதளத்தில் விஜய்யை ‘அணில்’ என்று கிண்டல் செய்வது ட்ரெண்ட்டானது.