மனம் உடையலாம், திருமணம் உடையலாம் – தனக்கு தானே கடிதம் எழுதிய டிடி.

0
3115
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர்.

- Advertisement -

ஆனாலும், அதையெல்லாம் தாண்டி டிடி தற்போதும் வெற்றிகரமான தொகுப்பாளினாக திகழ்ந்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி சமீபத்தில் தனக்கு தானே ஒரு தன்னம்பிக்கை கடிதம் ஒன்றை எழுதி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாகுவது, உங்கள் மனம் உடையலாம் உங்களின் திருமண வாழ்க்கை உடையலாம்.

மற்றவர்கள் உங்கள் நம்பிக்கையை உடைக்கலாம். உங்கள் குணத்தை பற்றி மற்றவர்கள் மோசமாக பேசலாம், என்ன ஆனாலும் நீங்கள் எப்படி இருந்தாலும் தினமும் எழுந்து உடை உடுத்தி உங்கள் வேலையை சரியாக செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணியின் தரத்தை யாரும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement