கண்ணம்மா முதல் தனம் வரை – விஜய் டிவி நாயகிகளுக்கு குரல் கொடுப்பது இவர் தான் – கௌரவித்த விஜய் டிவி.

0
2504
- Advertisement -

விஜய் டிவி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கும் கலைஞர் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே மக்களுடைய பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிற்காக வித்யாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வைக்கிறது. சீரியல் மட்டும் இல்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். டிவி பொதுவாகவே டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சொந்த குரலில் பேச மாட்டார்கள். அவர்கள் வேறு ஒருவர் தான் குரல் கொடுப்பார்கள். காரணம், அவர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

- Advertisement -

தமிழ் பேச தெரியாதவர்களாக இருக்கலாம். ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பதால் அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பல சீரியல்களின் நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவர்கள் மீனா ரோஷினி, பிரதீப். சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் டப்பிங் கலைஞர்களான மீனா ரோஷினி, பிரதீப் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அப்போது நிகழ்ச்சியில் மீனா ரோஷினி அவர்கள், நான் பாண்டியன் சீரியல் தனம், பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிரியா, பொன்னி சீரியலில் ஷமிதா, மௌன ராகம் சீரியலில் காதம்பரிக்கு குரல் கொடுக்கிறேன் என்று பேசுகின்றார்.

-விளம்பரம்-

இவரை அடுத்து டப்பிங் கலைஞரின் பிரதீப், நான் காற்றுக்கென்ன வேலி சூர்யா, முத்தழகு பூமிநாதன், பாக்கியலட்சுமி சீரியல் எழில், ராஜா ராணி சரவணன், ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஜீவா, மகாநதி சீரியலில் கவின், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன், வேலைக்காரன் சீரியலில் சபரி, நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கார்த்தி, கண்ணே கலைமானே சீரியலில் ராம் ஆகியோருக்கு டப்பிங் பேசுகிறேன் என்று கூறினார்.

இப்படி ஒரே குரலில் இத்தனை பேருக்கு குரல் கொடுப்பதை கேட்டு அங்கிருந்த பலருமே வியந்து போய் விட்டார்கள். இப்படி அவர்கள் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே டப்பிங் கலைஞர்களை பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement