தனது பிள்ளைக்காக ஃபோனில் உதவி கேட்ட தாய் – நேரில் சென்று உதவிய KPY பாலா.

0
1969
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிக்கு அளவே கிடையாது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார்.

- Advertisement -

சமூக சேவை செய்யும் பாலா

இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். சமீபத்தில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். பாலாவின் இந்த நல்ல மனசுக்கு தற்போது சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

பாலா வாங்கி தந்த ஆம்புலன்ஸ்:

பின் இவர் ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக இன்னொரு இலவச ஆம்புலன்ஸை வாங்கி தந்திருக்கிறார். இந்த மலைவாழ் பகுதியில் 8000 பேருக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் ஆம்புலன்ஸ் வசதி சுத்தமாகவே இல்லை. இதை அறிந்த பாலா அவர்களுக்கு வாக்குறுதி அளித்து வெளிநாடுகள், உள்ளூரு என்று தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தை நடத்தி இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி தந்திருக்கிறார். இதனை அடுத்து மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களை தேர்வு செய்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக நடிகர் பாலா தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

தாய் வைத்த கோரிக்கை:

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளக்கனை மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் பாலா 5 லட்சம் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி தந்திருக்கிறார். இந்த நிலையில் பாலாவுக்கு செல்போனில் அழைப்பு வந்திருக்கிறது. அந்த போனில் ஒரு தாய், என் மக்களுக்கு உடல் சரியில்லை உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே பாலா, அவரைப் பற்றிய விவரங்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பகிர்ந்தால் மருத்துவ உதவிக்கு பண்டு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

பாலாவுக்கு குவியும் பாராட்டு:

இதனை எடுத்து அந்த தாயும் தன் மகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். பின் பாலா, அந்த தாயிடம் நேரில் சந்திக்கலாமா என்று கேட்டுவிட்டு அவருடைய வீட்டிற்க்கே சென்று இருக்கிறார். மேலும், ஒரு லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்து இருக்கிறார். அதோடு அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் பாலாவே ஏற்று கொள்வதாக கூறி இருக்கிறார். மேலும், இந்த வீடியோவை பாலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலர், என்ன மனுஷன் சார் நீங்க! என்று பாலாவை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement