விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்துள்ளனர் உதாரணமாக சிவா கார்த்திகேயன் தொடங்கி தற்போது உள்ள பப்பு வரை அனைவருமே பிறரை கலாய்த்துக்கொண்டு, ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்தியாசமானவர்.
தனது தூய தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்து வருபவர். மேலும் இவரின் தமிழ் உச்சரிப்பிற்கும், கணீரென்ற குரலுக்கும் பல ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. 2010 துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் பாருங்க : முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி.!
திருமணத்திற்கு பின்னர் கோபிநாத்திற்கு வெண்பா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. பெரும்பாலும் கோபிநாத் தனது மனைவி மற்றும் குழந்தையை வெளியுலகத்திற்கு காண்பிக்காமல் இருந்தார்.
இதனால் இவர் பங்குபெறும் விருது வழங்கும் விழாகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இவரது மனைவி மற்றும் குழந்தையை அவ்வளவாக காண முடிவதும் இல்லை. சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கோபிநாத்.