தொகுப்பாளினி பிரியங்கா கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.
தொகுப்பாளர் பிரியங்கா குறித்த தகவல் :
மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசியில் சிறப்பாக சமைத்து டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார். தற்போது பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரியங்கா திருமணம்:
மேலும், பிரியங்கா திருமணத்திற்க்குபின் தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் தன்னுடைய கணவரைப் பற்றியே பேசி வந்த பிரியங்கா திடீரென்று தன் கணவரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ரசிகர்கள் எல்லோருமே கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பின்னால் பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபட்டு பிரிந்து விட்டார்கள் என்று தெரிந்தது.
அதை பிரியங்காவே நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ப்ரியங்கா இரண்டாம் திருமணம்:
இப்படி இருக்கும் நிலையில் பிரியங்கா வெளிநாட்டில் ரகசியமாக வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். இந்த திருமணத்தில் அமீர், பாவனி, அன்ஷிதா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பிரியங்காவின் கணவர் வசி யார் என்று குறித்து தான் பலருமே கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் பிரியங்காவின் கணவரை குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம்.
ப்ரியங்கா கணவர் குறித்த தகவல்:
வசி டிஜேவாக பணியாற்றி வருகிறார். இவர் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பப்புகளில் டிஜேவாக பணியாற்றி இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்காவும் வசியும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். அதற்கு பின் இவர்களுக்கிடையில் காதல் மறந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு இருவருமே காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்து கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் வசியுடைய தலைமுடி ரொம்ப நரைத்து போய் இருப்பதால் இவர் ரொம்ப வயதானவரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தற்போது இவருக்கு 42 வயது. பிரியங்காவிற்கு 32. இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம். இருந்தாலும் வயது, ஜாதி, மதம் கடந்து திருமணம் செய்து இருக்கிறார்கள்.