ஓ, இப்படி தான் நடிக்கிறீங்களா ? கேலிக்கு உள்ளான விஜய் டிவியின் பிரபல சீரியல் – இந்த நடிகை யாருன்னு தெரியுதா ?

0
581
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலை நெட்டிசன்கள் கிண்டல் செய்யும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :-

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் போராடி வருகிறார். இந்த சுழலில் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.

சீரியலில் விலகிய நடிகை:

மேலும், சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா விலகி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பதிலாக சீரியல் நடிகை வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது சீரியலில் ஆதி, ஜெசியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததும் ஆதி பொய் கூறுகிறார். உடனே ஜெசி பெற்றோர்கள் போலீசில் ஆதி மீது புகார் அளிக்கப் போகிறார்கள். ஆனால், இதை சந்தியா தடுத்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் ஆதியும் ஜெசியும் சேர்த்து வைக்கிறேன் என்று கூறுகிறார். பின் சரவணன் குடும்பத்திற்கு ஆதி செய்த வேலை தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் ஆதியின் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து ஆதி-ஜெசி திருமணம் நடக்குமா? என்ற பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சீரியலை கலாய்த்த நெட்டிசன்கள்:

இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ஆதி – ஜெசி இருவரும் இருக்கிறார்கள். அந்த காட்சி எடுக்கும் போது ஜெஸ்ஸிக்கு ஸ்டூல் வைத்து இருக்கிறார். இதை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். பலர், ஜெசி உங்களுடைய திறமைக்கு வேற சீரியலில் போய் நடியுங்கள். இந்த சீரியலில் இருந்தாலே இப்படித்தான் விமர்சிப்பார்கள் என்றும், ஸ்டூல மேல நின்றா நடிக்கிறாங்க? அதுக்கு அந்த ஹீல்ஸ் செருப்புல நின்னு நடிச்சாலே உயரமா இருக்கும்ல என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement