விஜய் டிவி, சன் டிவியை தொடர்ந்து வேறு ஒரு டிவி சீரியலில் அமித். என்ன சேனல் தெரியுமா ?

0
1087
- Advertisement -

விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான அமீத் மற்றும் ஸ்ரீரஞ்சனி நடிக்கும் புதிய தொடர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி. சூரியன் எஃப்.எம்-ல் ஒரு வருடம் ஆர்.ஜேவாக வேலைபார்த்த பிறகு, புதுயுகம் ‘கேலி பாதி கிண்டல் பாதி’ நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் ஶ்ரீரஞ்சனி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம்  2016-ம் ஆண்டு ஆண்டு நடைபெற்றது. அமீத் தொலைக்காட்சி நடிகராக மட்டுமல்லாமல் சினிமாவிலும் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால், சமீப காலமாக ஸ்ரீரஞ்சனியை தொலைக்காட்ச்சி தொடர்களில் பார்க்க முடியவில்லை. கலக்க போவது நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருந்தார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்து வந்த ஸ்ரீரஞ்சினிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் திகதி ஸ்ரீரஞ்சனிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துது. குழந்தை பிறந்த பின்னர் ஸ்ரீரஞ்சனி தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வந்தார். அமித் பார்கவ் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணாடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல சன் தொலைக்காட்சியில் கண்மணி சீரியலிலும் நடித்து வருகிறார்.

இறுதியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் விஜய் டிவி சீரியலில் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில்  ஜீ தமிழில் தொடங்கவுள்ள சீரியலில் அமித் பார்கவ் நடிக்கவுள்ளாராம். விரைவில் இந்த தொடர் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது என்று சின்னத்திரை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement