இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.
இதற்கு காரணம் எங்களுக்குள் உள்ள பிரச்சனை தான். ஆனால் இதற்காக தற்கொலை செய்துகொள்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார் பவானி. அதன் பின்னர் அவரது வாழ்க்கையே போனாதாக நினைத்திருந்த அவருக்கு சின்ன தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது அந்த கடினமான வாழ்க்கையை மறந்து சீரியலில் நடித்து வருகிறார்.
பவானியும் இன்னொரு நடிகரும் மிக நெருக்கமாக இருந்தது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பவானி வெளியிட்டதால் மனம் உடைந்து போய் அவரது கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.




