விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.
தனது முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இவர் நண்பேன்டா படத்தில் நயன்தாரா தோழியாகவும் நடித்துள்ளார்.
இதையும் படியுங்க : தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் என்னவானர்.! இவருக்கா இந்த நிலை.!
சமீபத்தில் இவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வர, இவருக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
ஆனால், தற்போது ஜனனி விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியலில் நடித்து வருகிறாராம். அந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தானாம் இது. இதனால் ஜனனி அஷோக் குமாரின் ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.