அப்பாவுக்காக மகன் செய்த செயல்..? அதிர்ச்சியில் உறைந்த விஜயகாந்த.! புகைப்படம் உள்ளே

0
1270
shanmuga-pandiyan-actor
- Advertisement -

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று வந்த நடிகர் சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ டாட்டூவாகக் கையில் வரைந்திருக்கிறார். இதைக் காண்பித்து விஜயகாந்த்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மகன்.

-விளம்பரம்-

vijayakanth

- Advertisement -

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர், `சகாப்தம்’ படம் மூலம் கதாநாயகனாகத் தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட`மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, `தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில், லண்டன் சென்று திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். அந்த மகிழ்ச்சி தருணத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜயகாந்த் தற்போது தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

shanmuga-pandiyan

புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமல்லாமல், `தமிழன் என்று சொல் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற என் இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் என் கண்களை பச்சைகுத்தியதைக் (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement