10 வருடங்களாக கட்டி வந்த வீடு, மாடு மூலம் வந்த அபசகுணம் – கடைசி வரை நிறைவேறாமல் போன கேப்டனின் ஆசை.

0
814
- Advertisement -

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவித்தனர்

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. நேற்று மாலை விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..

- Advertisement -

விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை:

இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்த் அவர்கள் புதிதாக பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதில் தான் விஜயகாந்த் குடிபெயரப்போவதாகவும் கூறியிருந்தார். காரணம், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கு வசதி இல்லை. இதனால் தான் விஜயகாந்த் அவர்கள் காட்டுப்பாக்கத்தில் சுமார் 20000 சதுர அடியில் புதிதாக விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வந்தார். 2013 ஆம் ஆண்டு இந்த புது வீடு கட்டும் பணி தொடங்கியது. இடையில் சில பிரச்சினைகளால் நின்றது.

விஜயகாந்த் வீட்டில் வளர்க்கப்பட்ட பிராணி:

பின் பத்தாண்டுகளாக இந்த வீட்டினுடைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது 90% இந்த புது வீட்டின் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குள் விஜயகாந்த் இறந்திருப்பது பலருக்குமே சோகத்தை ஏற்படுத்திருக்கிறது. மேலும், சில வருடங்களுக்கு முன் இந்த வீட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அப்பாராவ் என்பவர் தன்னுடைய மனைவியுடன் அங்கேயே தங்கி பாதுகாத்து வந்திருக்கிறார். அதோடு இந்த புது வீட்டில் மூன்று பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த மாடுகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை வைத்து பராமரித்து வந்தார்கள். இந்த வீட்டுப் பணியை விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதாவும் அடிக்கடி சென்று பார்த்து வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

காணாமல் போன மாடுகள்:

அப்போது இவர்கள் பசு மாடுகளுக்கு எல்லாம் உணவளித்தும் செல்வார்களாம். நேற்று முன்தினம் இரவு 3 மாடுகள் வீட்டின் முன் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. அப்பாராவ் அவருடைய மனைவி இருவரும் தூங்கி விட்டார்கள். பின் நேற்று காலை எழுந்து பார்த்தபோது இரண்டு பசுமாடுகள் மாயமாகி இருக்கிறது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரையுமே மாடுகளை தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யாரோ அந்த மாடுகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை:

இதனை அடுத்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து இருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் இருக்கிறது. இரவு நேரங்களில் முன்பகுதியில் உள்ள இரும்பு கதவு உள்பக்கமாக பூட்டி தான் இருக்கும். அதற்கு அருகில் உள்ள ஒரு மற்றொரு சிறிய இரும்பு கதவு மட்டும் திறந்திருக்கும். அந்த மாடுகள் இரும்பு கதவு நடந்து சென்றிருக்குமா? மர்ம நபர்கள்மாடுகளை திருடி சென்றிருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறது.

Advertisement