‘காணாம தேடுறோம் கேப்டன’- 48வது நினைவு நாளில் வெளியிடப்பட்ட கேப்டனின் முதல் நினைவு அஞ்சலி. மனதை உலுக்கும் வீடியோ இதோ.

0
579
- Advertisement -

விஜயகாந்தின் 48’வது நினைவு நாளில் விஜயகாந்தின் 48’வது நினைவு நாளில் வெளியிட்டார் தே.மு.தி.க தலைவர் பிரேமலதா.மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டதோடு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நபராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சி கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த்.ஏழை, உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர்.

-விளம்பரம்-

இப்படி பல உதவிகளை செய்த இவர் தேமுதிக என்ற கட்சியை துவங்கி அரசியலில் குதித்தார். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார்.அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு சளி சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

அதற்கு பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீட்டுக்கு திருப்பினார். பிறகு மீண்டும் நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.

தலைவரான பிரேமலதா :

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் இறந்ததற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் தே.மு.தி.க கட்சியின் தலைவராக பிரேமலதா பொறுப்பேற்றார். தற்போது அவர் தான் கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார்.

-விளம்பரம்-

மோசமான கேப்டனின் உடல்நிலை :

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து இருந்தார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருந்தார்கள்.

குணாஜீ இயக்கத்தில், கெவின் டிகோஸ்டா இசையில், இசைப்பிரியன் பாடல் வரிகளை, ஜாக் அருணாசலம் பாடி, தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். கர்நாடகாவை சார்ந்த ஜமால் உசேன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார். நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதனால் அங்கே கூடி இருந்தவர்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் அந்த பாடலை கேட்டனர்.

Advertisement