விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகரும் தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.
இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மேலும், சில தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில், விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை.
அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. அதில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மோசமான வதந்திகள் பரவி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் கேப்டன் விரைவில் மீண்டு வருவார் என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இது வழக்கமான பரிசோதனை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார்.
கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இப்படி இருக்க விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்றை பலர் ஷேர் செய்து வருகின்றனர். அதில், எனக்குன்னு ஒரு இடம் இருக்கும்ல அது போதும், என்னய பணம் செத்தா அர்னாக்கயிற அறுத்து போட்டு போயிடுவான் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ ரசிங்கர்கள் பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.