என்கிட்ட அப்படி சொன்ன ஒரே தமிழ் நடிகர் அவர் தாங்க – தனது தந்தையை பற்றி மும்பை கார் ட்ரைவர் சொன்ன விஷயம் குறித்து அவரின் மகன்.

0
434
- Advertisement -

மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டதோடு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நபராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சி கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த்.ஏழை, உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர்.

-விளம்பரம்-

இப்படி பல உதவிகளை செய்த இவர் தேமுதிக என்ற கட்சியை துவங்கி அரசியலில் குதித்தார். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார்.அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு சளி சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

அதற்கு பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீட்டுக்கு திருப்பினார். பிறகு மீண்டும் நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.

தலைவரான பிரேமலதா :

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் இறந்ததற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் தே.மு.தி.க கட்சியின் தலைவராக பிரேமலதா பொறுப்பேற்றார். தற்போது அவர் தான் கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார்.

-விளம்பரம்-

விஜயபிரபாகரன் சொன்ன தகவல் :

கேப்டன் விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். எல்லோரும் வயிறார சாப்பிட வேண்டும் என்பது தான். ஆனால், அதையும் தாண்டி யாரென்று தெரியதாக நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளை செய்து இருக்கிறார். இந்நிலையில், ஒரு மேடையில் பேசிய விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரன் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

கார் ட்ரைவர் சொன்ன விஷயம் :

ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது வாடகை காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த டிரைவர் ‘என் காரில் பல தமிழ் நடிகர்கள் ஏறி இருக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும்தான் 2 ஆயிரம் பணம் கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டு போ’ என சொன்னார். அவர் பார்ப்பதற்கு உங்களை போலவே இருந்தார். அவரின் பெயர் கூட காந்த் என முடியும் என்றார். நான் ‘ரஜினிகாந்தா?’ எனக் கேட்டேன். ‘இல்லை இல்லை’ என்றார். ‘விஜயகாந்தா?’ எனக்கேட்டேன். ‘எஸ்…எஸ்.. விஜயகாந்த்.. அவர் ஒரு நல்ல மனிதர். இரண்டாயிரம் கையில் கொடுத்து சாப்பிட்டு போ என சொன்ன ஒரே தமிழ் நடிகர் அவர்தான்’ என சொன்னார்’ என விஜய பிரபகாரன் கூறியிருந்தார்.

Advertisement