எத்தனையோ நடிகர்கள் தங்களது செல்வாக்கு தனது பெற்றோர்கள், சொந்தங்கள் திரை துறையில் இருந்தார்கள் என அதன் மூலமாக திரைக்கு வந்தோர் மத்தியில். சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தன் பயணத்தை தொடங்கிய சீயான் விக்ரம் சேது, காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் தன் உடலை வருத்திக்கொண்டு நடித்ததற்காக தான் இப்பொழுது சினிமாவில் சியான் விக்ரம் அவர்கள் இந்த உயரத்தில் உள்ளார். சீயான் விக்ரம் என்றாலே நடிப்புக்காக எப்பேர்பட்ட வேடங்களையும் எதையும் துணிந்து செய்வார் என்று நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
எம்ஜிஆர், சிவாஜி, கணேசன், நம்பியார் இவர்களைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் நடிப்பிற்கு ஒரு உதாரணம் என்றால் அது சீயான் விக்ரம் என்று சொல்வது மிகையாகது.அந்த அளவிற்கு தன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். கடந்த விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் “கோப்ரா” படத்தில் நடித்து இருந்தார்.
இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்து இருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிநடித்து இருந்தார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில்நடித்து இருந்தார். . மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்துஇருந்தார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவான இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது.
பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. என்னதான் இந்த படத்தில் விக்ரம் பல விதமான கெட்டப்பில் வந்தாலும் அது கதைக்கு பலம் சேர்க்கவில்லை. இந்த நிலையில் தன் வீட்டில் 40 வருடங்களாக வேலை செய்து வருபவரின் மகனின் திருமணத்திற்கு விக்ரம் சென்று இருக்கிறார். நடிகர் விக்ரம், தன் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம்.
அந்தவகையில் மேரி மற்றும் அவரது கணவர் ஒளிமாறன் இருவரும் பல வருடங்களாக விக்ரமின் வீட்டில் பணிபுரிந்து வந்தவர்கள். கணவர் ஒளிமாறன் மறைந்த பின்பும் மேரி, சுமார் 40 வருடங்களாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருபவர். இந்நிலையில் மேரியின் மகன் தீபக் என்பவருக்கும் மணமகள் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் விக்ரம் பளபளவெனப் பட்டு வேட்டி சட்டையில் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினர்.