வர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ்.! பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.!

0
1035
Dhuruv
- Advertisement -

நடிகர் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாக இருந்தார். தெலுங்கில் வெற்றியடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக்கை இயக்குனர் பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்து. ஆனால், சில பல காரணங்களால் இந்த படம் வெளியிடபடாமல் கைவிடபட்டது.

-விளம்பரம்-

தற்போது இந்த படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் முதலில் இருந்து எடுத்து வருகின்றனர். இந்த படத்தை ஒரிஜினல் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கிரி சாயா என்பவர் இயக்க உள்ளார்.

- Advertisement -

மேலும், வர்மா படத்தில் இருந்த யாரும் ஆதித்யா வர்மா படத்தில் இல்லை. வர்மா படம் தான் துருவ்வின் முதல் படமாக இருந்தது ஆனால், தனது முதல் படமே இப்படி ஒரு தடங்களை சந்தித்துள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் துருவ்.

இந்த நிலையில் நடிகர் துருவ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் உங்களுக்காண சிறந்த விடயங்களை நீங்கள் செய்ய துவங்கும் போது நீங்கள் பல மனிதர்களை இழக்க நேரிடும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement