இங்க யார் விடியல பாக்கனும்னு முடிவு பண்றது நான் தான்’ – படு மாஸ் வசனத்துடன் வெளியான விக்ரம் பட ட்ரைலர்.

0
323
vikram
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பின் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

ரிலீசுக்கு காத்திருக்கும் விக்ரம் :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வெளியீட்டுக்க்கு காத்துகொண்டு இருக்கிறது.

விக்ரம் படத்தின் கதை :

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க பார்க்கிறார்.இதனால் கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-304-1024x640.jpg

சர்ச்சையை கிளப்பிய வரிகள் :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது. பத்தல பத்தல என்ற பெயரில் வெளியான அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பால்லே போன்ற வரிகளும் கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே போன்ற வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்தது.

இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு :

மேலும், அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது ஒருபுறம் இருக்க இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ரஜினி, விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

Advertisement