வாடகை தராததால் கெட்ட வார்த்தைகளால் திட்டிய வீட்டு ஓனர், விஜய் செய்த விஷயம் – சர்வைவரில் விக்ராந்த் உருக்கம்.

0
799
vijay
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கி பல எலிமினேஷன்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், நாட்கள் செல்ல செல்ல போட்டிகளும் சவால்களும் கடுமையாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், தளபதி விஜயின் தம்பியும், நடிகருமான விக்ராந்த் அவர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

நடிகர் விக்ராந்த் அவர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் நன்முறையில் விளையாடிக்கொண்டு வந்ததால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ராந்த். இவர் கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் விஜய் குறித்து தன் குடும்பத்தாருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை விக்ராந்த் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த் அவர்கள் தன் அண்ணன் விஜய் பற்றி அவ்வப்போது பேசி இருந்தார். ஆனால், விஜய் குறித்து தற்போது விக்ராந்த் பேசிய விஷயம் உணர்வு பூர்ணமாக உள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, விஜய் அண்ணா எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் இருந்தோம். வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் வீட்டு ஓனர் வந்து சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்.

இதெல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போது விஜய் அண்ணா எங்களுக்காக ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி தந்து உதவினார். விஜய் எனக்கு அண்ணன் தான். இருந்தாலும் இந்த காலத்தில் யாரும் இப்படி எல்லாம் செய்யமாட்டர்கள். அதுவும் இது போல் செய்வார்களா? என்று எனக்கு தெரியாது. விஜய் அண்ணா செய்ததை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அந்த நேரத்தில் அவர் செய்ததற்கு நன்றி சொன்னதே இல்லை. இந்த தருணத்தில் சொல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement