என்னை அடிமையா வச்சிருந்தப்போ மிரட்டி வாங்கிய ஆடியோ அது – நடிகர் விமல் பரபரப்பு விளக்கம். (இதோ அந்த ஆடியோ)

0
551
- Advertisement -

பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன் என்று தான் பேசியிருக்கும் ஆடியோவிற்கு மறுப்பு தெரிவித்து விமல் பதிவிட்டு இருக்கும் புது ஆடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் விலங்கு ஒரு வெப் சீரிஸ். இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த வெப் சீரிஸ் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இது தவிர தற்போது விமல் அவர்கள் ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

விமல் மீது மோசடி புகார்:

இப்படி ஒரு நிலையில் நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்து இருந்தார். அதில் அவர், நடிகர் விமல் மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கடன் வாங்கினார். மேலும், அந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் என்னிடம் வாங்கிய கடன் தொகை 5 கோடியை இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார் என்று கூறி இருந்தார்.

சிங்காரவேலன் அளித்த புகார்:

ஆனால், தான் எந்த பணமும் வாங்கவில்லை என்று நடிகர் விமல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிங்காரவேலன் எனும் தயாரிப்பாளர் ஒருவரும் விமல் மீது புகார் அளித்துள்ளார். இவர் கோபியின் நண்பர் ஆவார். விமல் குறித்து அவர் கூறியிருப்பது, மன்னர் வகையறா படம் எடுக்கும்போது பாதியில் பணம் இல்லாத காரணத்தினால் என்னிடம் ஒன்றரை கோடி ரூபாய் கொடுங்கள் படத்தின் உரிமையை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். நானும் ஒன்றரை கோடி ரூபாயை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அந்த படமும் வெற்றி அடையவில்லை.

-விளம்பரம்-

விமல் மீது எழும் புகார்:

எங்களைப் போன்று சினிமா துறையில் உள்ள பல பிரபலமான தயாரிப்பாளர்களும் விமலிடம் கோடிக்கணக்கான அளவில் பணத்தை கடனாக கொடுத்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று விமல் மீது குற்றம் சாட்டி இருந்தார். இவரை தொடந்து தயாரிப்பாளரின் மகள் ஒருவரும் விமல் மீது பண மோசடி புகார் அளித்து இருக்கிறார். இப்படி விமல் மீது பல பேர் புகார் அளித்த வண்ணம் உள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் விமலின் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விமல் விமல் கூறியிருப்பது, சிங்காரவேலன் அண்ணனுக்கும், கோபி சாருக்கும் நன்றி. என்னை மெருகேற்றி மேண்மைபடுத்தின உங்களுக்கு முதலில் நன்றி.

விமலின் பழைய ஆடியோ:

இந்த அவமானங்களை, மன உளைச்சல் தாங்க முடியாமல் நொந்து போய்விட்டேன். ஆனால், இப்போ எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வந்த மாதிரி இருக்கிறது. இதை எல்லாம் எனக்கு கிடைத்த சவாலாக நினைத்திருக்கிறேன். நான் போராடுவதற்கான ஒரு வழியாக உள்ளது. கண்டிப்பாக நான் ஓடிக் கொண்டே இருப்பேன். இந்த வருடத்திற்குள் உங்களுடைய கடனையும் அடைத்து விடுவேன். நானும் நிம்மதியாக இருப்பேன். நீங்களே என்னைப் பாராட்டும் காலம் வரும் என்று கூறி இருக்கிறார். இப்படி விமல் பேசி இருக்கும் ஆடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதைப் பார்த்து விமல் கூறி இருப்பது,

விமலின் புதிய ஆடியோவில் கூறியது:

இது புதிய ஆடியோவே இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நான் பேசிய ஆடியோ. அதனை புதிது போல் சித்தரித்து இருவரும் வெளியிட்டு மோசடி செய்கின்றனர். என்னை மிரட்டி அந்த ஆடியோவை பேச வைத்தனர். அவர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் அப்படிப் பேசி இருந்தேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இதற்கு மேல் அவர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து போக மாட்டேன். சட்டப்படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பேன் என்று விமல் புது ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த ஆடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement