ஆதிரை யாரை திருமணம் செய்யப்போகிறார் – எதிர்நீச்சல் கரிகாலன் சொன்ன பதில் இதோ.

0
1037
Adirai
- Advertisement -

எதிர் நீச்சல் சீரியலில் ஆதிரை யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். பின் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் அருண்- ஆதிரை திருமணம் நடக்க பல டிவிஸ்டுகள் சென்று கொண்டிருக்கின்றது. பட்டம்மாள் அப்பத்தாவின் 40 சதவீதம் சேரை வாங்குவதற்கு ஆதி குணசேகரன் திட்டம் போடுகிறார்கள். இதனால் குணசேகரன் ஆதிரை காதலித்த அருணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி நிச்சயதார்த்தம் வரை கொண்டு செல்கிறார். ஆனால், தனக்கு சேர வேண்டிய 40% ஷேர் கொடுத்ததால் தான் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறுகிறார்.

சீரியலின் கதை:

இதனால் அப்பத்தாவும் எல்லாருடைய வற்புறுத்தலின் படி சொத்தை குணசேகரனுக்கு எழுதி வைக்கிறார். பின் மணமுடைந்த அப்பத்தா கோமா நிலைமைக்கு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் தான் செய்தது நிச்சயதார்த்தம் இல்லை. இதெல்லாம் சொத்தை வாங்குவதற்கான நாடகம் என்று கூறுகிறார். உடனே அவர் கரிகாலனுக்கும் ஆதரைக்கும் திருமணம் ஏற்பாடுகளை செய்கிறார். இதில் வீட்டில் உள்ள பலருக்குமே அதிர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. பின் குணசேகரன் இடம் நேர்மையான வழியில் போராடினால் முடியாது. அவருடைய வழியில் சென்று போராட வேண்டும் என்று வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஜனனி கூறுகிறார்.

-விளம்பரம்-

விமல் குமார் குறித்த தகவல்:

இறுதியில் ஆதிரை திருமணம் யாருடன் நடக்கும் என்ற பல எதிர்பார்ப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஆதிரை திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வாயிலாகி வருகிறது. இந்த சீரியலில் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விமல் குமார். இவர் விஜேவாக தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதற்கு பிறகு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஷோ ப்ரொடியூசர் என்று படிப்படியாக முன்னேறினார். தற்போது கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் சீரியலில் மிரட்டி வருகிறார்.

விமல் குமார் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், இந்த இடத்திற்கு வருவதற்கு நான் பல வருடங்களாக கஷ்டப்பட்டு இருக்கிறேன். கரிகாலனாக மக்கள் மத்தியில் எனக்கு சப்போர்ட் கிடைப்பது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த கதாபாத்திரம் ஒரு தலை காதலோடு நான் இருக்கிற மாதிரி இருக்கும். கதைப்படி ஆதிரை யாரை திருமணம் செய்வார்கள்? என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆடியன்ஸ் ஓட பல்ஸ் என்ன என்று இயக்குனருக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு மட்டும் தான் அடுத்து என்ன ஆகப்போகிறது என்று தெரியும் என்று கூறி இருக்கிறார். ரசிகர்களுமே ஆதிரை, அருண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால், ஆதிரை யாரை திருமணம் செய்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement