மகளீர் தினத்தில் தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டு மனைவிக்கு வாழ்த்து சொன்ன கோலி.

0
1703
- Advertisement -

சினிமாவும் கிரிக்கெட்டுக்கு என்றும் பிரிக்கமுடியாத ஒரு விடயமாக தான் இருந்து வருகிறது. சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் ஒருவர்.விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக காதல் செய்தது 2017 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் ஒரு கியூட் ஜோடியாக வளம் வந்தாலும், அனுஸ்கா சர்மா மைதானத்திற்கு வருவதால் தான் விராட் கோலி சரியாக ஆடுவது இல்லை என்ற சில சர்ச்சைகளும் கூட எழுந்தது. ஆனால், அது உண்மை இல்லை என்றும், தனது மனைவி தான் தன்னுடைய பலம் என்றும் கூறினார் கோலி. பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் கூட புகையிலை விளம்பர படமொன்றில் நடித்திருந்தார்.இவர்கள் இருவரும் வாழ்ந்தது போதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறார்கள் என்பது போல் இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் இது வதந்தி என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

2016ஆம் ஆண்டின் போதும் கூட இதே போன்று இவர்கள் இருவருக்கும் இடையேயான சிறிய பிரிவினை பெரிய விடயமாக கிளப்பிய நெட்டிசன்கள் மீண்டும் அதே வேலையை துவங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின்னரும் நடிகை அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு வமிகா என்று பெயர் வைத்தனர். ஆனால், தனது மகளின் புகைப்படங்களை கோலி அவ்வளவாக சமூக வலைதளத்தில் பகிர்வது இல்லை. இப்படி ஒரு நிலையில் இன்று மகளீர் தினத்தை முன்னிட்டு விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டு மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கோலி.

-விளம்பரம்-
Advertisement