அரை சதம் அடித்து தாலாட்டு பாடிய கோலி, மகளின் முகத்தை முதன் முறையாக காட்டிய அனுஷ்கா. வைரல் வீடியோ.

0
1086
kholi
- Advertisement -

சினிமாவும் கிரிக்கெட்டுக்கு என்றும் பிரிக்கமுடியாத ஒரு விடயமாக தான் இருந்து வருகிறது. சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் ஒருவர்.விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோரும் ஒருவர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

தங்களது திருமணத்திற்கு பிறகும் செல்வாக்குமிக்க ஜோடியாக திகழ்ந்த வந்தவர்கள் இந்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர். பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துவிடுவார். ஆனால், குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடவில்லை.

- Advertisement -

விருஷ்கா மகள் வாமிகா :

இந்நிலையில் தங்களது மகளின் முகத்தை இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டதாவது : வாமிகாவின் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ இதுவரை வெளியிடாமல் இருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. ஒரு பெற்றோராக நாங்கள் எங்களது மகளின் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டாம் என்று தொடர்ச்சியாக ஊடகத்துறையிடம் கேட்டுக் கொண்டிருந்தோம்.

மகள் முகத்தை காட்டாத காரணம் :

அதன்படி இதுவரை எந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்காமல் இருப்பதற்கு நன்றி. எங்களது குழந்தை சமூக வளைதளம் மூலமாகவோ அல்லது மீடியா மூலமாகவோ அறியப்பட்டு வளரக் கூடாது என்பதற்காகவும், எங்களது குழந்தையின் வாழ்க்கை மிகவும் ஃப்ரீயாகவும், இலகுவாக அமைய வேண்டும் என்பதனாலேயே நாங்கள் இதனை தவிர்த்து வருகிறோம். ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் அவரை நாங்கள் தடுக்க முடியாது. அதுவரை எங்களது குழந்தை குழந்தையாக வளர வேண்டும்.

-விளம்பரம்-

அரை சதம் மூலம் தாலாட்டு பாடிய கோலி :

அவருடைய பிரைவசிக்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அனுஷ்கா சர்மா பதிவிட்டு ஊடகத்துறைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தங்கள் மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர் விருஷ்கா தம்பதியினர். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சேஸிங்கின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி ராகுல் ஆட்டமிழந்த பிறகு களம் புகுந்தார்.

வைரலாகும் வாமிகாவின் வீடியோ :

இந்த போட்டியில் அரைசதம் கடந்த விராட் கோலி கேலரியில் இருந்த தனது குழந்தைக்காக இந்த அரை சதத்தை அர்ப்பணித்தார். இதுவரை சமூகவலைதளத்திலோ அல்லது எந்தவிதமான ஊடகத்திலோ வெளிவராத அவரது குழந்தையின் முகத்தை இந்தப் போட்டியின் போது அவர்கள் வெளிக்காட்டினர். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த வாமிகாவின் முகத்தினை கோலி தற்போது முதல் முறையாக வெளிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement