முதல் நாளில் வசூலை அள்ளிய கார்த்தியின் விருமன் – எவ்ளோ தெரியுமா ?

0
424
viruman
- Advertisement -

கார்த்தியின் விருமன் படத்தின் முதல் நாள் கலெக்சன் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

விருமன் படம்:

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். பொதுவாக, கார்த்தி ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களுடன் பணியாற்றிபதில்லை. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தன் முந்தய இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்த்து இருக்கிறார் கார்த்தி.

படத்தின் கதை:

படத்தில் ஊர் தாசில்தாராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றன. அதில், கடைசி மகன் தான் கார்த்தி. கார்த்தியின் தாயாராக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். கார்த்தி தன் தந்தையை விட தாய் மீது தான் அதிகம் பாசம் வைத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சரண்யா பொன்வண்ணன் இறந்து விடுகிறார். தன்னுடைய தாயார் சரண்யா பொன்வானனின் இறப்பிற்கு பிரகாஷ்ராஜ் காரணமாக இருப்பதால் அவரை கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கார்த்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இதனால் இவர்கள் குடும்பத்திலேயே பல பிரச்சனைகள் வெடிக்கின்றது. கார்த்தியின் செயல்களால் கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்தியை ஏமாற்றி அவரது தாயார் சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறார். இப்படியே சென்று கொண்டிருக்க சரண்யா பொன்வண்ணனின் இறப்பிற்கு என்ன காரணம் ? தன்னுடைய தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி கொலை செய்தாரா? இல்லை குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் வசூல்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முதல் நாளில் மட்டும் இந்தப்படம் 8 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement