திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தையை தத்தெடுத்ததை அறிவித்த விருமாண்டி பட நடிகை – அவர் சொன்ன காரணம்.

0
1016
- Advertisement -

விருமாண்டி பட நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்து காரணம் குறித்து கூறி இருக்கிறார். 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமர். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்தது.மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

- Advertisement -

அன்னலட்சுமியாக பிரபலமான ஆபிராமி :

இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார் என்றும் சொல்லலாம். மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார். அதற்கு பின்னர் சரியாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

திருமண வாழ்க்கை

இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். மேலும்,இவர் திருமணத்திற்குப் பின்னும் மூன்று படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே படம் . ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளம் படங்களில் மட்டும் தான் நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

பட வாய்ப்புகள் குறைந்ததால் இடையில் சீரியல் பக்கம் சென்றார் அபிராமி.ஆனால், கடந்த சில வருடங்களாக சீரியலில் நடிப்பதையும் நிறுத்தினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்தார். இதுகுறித்து தெரிவித்த அவர் ‘‛நானும் ராகுலும் கடந்தாண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அப்போது முதல் எங்கள் வாழ்க்கை அழகாக மாறியது இன்று(மே 14) அன்னையர் தினத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் கருதுகிறேன்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்தது குறித்தும் அவளுக்கு கல்கி என்று பெயர் வைத்த காரணம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன்.மகளுக்கு அப்படி ஏன் பெயர் வைத்தேன் என்றால் கல்கி ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன், பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

Advertisement