கடந்த செவ்வாய்கிழமை மாலை ஆன்லைன் பைரஸி குற்றங்கள் தொடர்பாக இணையத்தில் புதுப்படங்களை பதிவேற்றியதற்காக கௌரிசங்கர் என்பவர் திருவல்லிக்கேணி காவலர்களால் கைதுசெய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவர் தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் என்றும் இனிமேல் அந்த இணையதளத்தில் புதுப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படாது என்றும் கூறப்பட்ட நிலையில்
தற்போது அதே தமிழ்கன் இணையதளத்தில் பிரவுவின் மகன் விக்ரம்பிரபு நடித்து வெளிவந்த “நெருப்புடா” புதியதிரைப்படம் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கைது செய்யப்பட்ட கௌரிசங்கர் தான் தமிழ்கன் இணையதளத்தின் அட்மினா அல்லது வேறுயாரவதா என்கிற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியலுக்கு வரப்போகிறார் விஷால்…புது கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது
விஷாலுக்கும்,காவல்துறையினருக்கும் தமிழ்கன் இணையதளம் அல்வா கொடுத்துள்ளது “நெருப்புடா” திரைப்படம் இணையத்தில் வெளியானது மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.