அந்த இரண்டு முன்னணி நடிகர்கள்தான் இதற்கெல்லாம் பின்னால் இருக்கிறார்கள் – தங்கள் குடும்பத்தை கேலி செய்து வரும் மீம் குறித்து பிரபல நடிகர் எச்சரிக்கை.

0
608
Vihsnu
- Advertisement -

எங்கள் குடும்பத்தை பற்றி இனிமேல் யார் மீம்ஸ் போட்டாலும் அவர்கள் மீது 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் என்று தெலுங்கு மூத்த நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவை பொறுத்த வரையில் சில குடும்பங்கள் தான் ஆட்சி செய்கின்றது என்று சொல்லலாம். வாரிசு நடிகர்கள் அதிகம் தெலுங்கு சினிமாவில் உள்ளது. அதில் முக்கியமானது நாகர்ஜுன் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், மகேஷ்பாபு குடும்பம், மோகன்பாபு குடும்பம், பாலகிருஷ்ணா குடும்பம். இதில் மோகன் பாபுவின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் நடிகர் விஷ்ணு மஞ்சு.

-விளம்பரம்-

தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மஞ்சு விஷ்ணு மஞ்சு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனரும் ஆவார். இவரது பெயரில் விஷ்ணு என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். மேலும், இவர் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் என்ற போட்டியில் தெலுங்கு திரையுலகத்திற்கு ஆதரவானவர். சமீபத்தில் நடந்த தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சு போட்டி இட்டிருந்தார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார்.

- Advertisement -

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தல்:

இவர்கள் இருவருக்கும் மத்தியில் காரசாரமான தேர்தல் பிரச்சாரம் நடந்தது. மேலும், இந்த இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு செய்த தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த வீடியோக்கள் கூட சோசியல் மீடியாவில் சுடச்சுட விவாதங்களாக வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் பிரகாஷ்ராஜ் அணி விஷ்ணுவை தாக்கியும் விஷ்ணு மஞ்சு அணி பிரகாஷ்ராஜ் தாக்கியும் கடுமையாகப் பேசி இருந்தார்கள். பின் இறுதியில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி விஷ்ணு ம்ஞ்சு தேர்தலில் வெற்றி வாகை சூடினார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

மோகன் பாபு நடித்த படம் கிண்டல் :

இந்த நிலையில் மோகன் பாபு நடித்த சன் ஆப் இந்தியா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு ட்ரோல் செய்தும், மீம்ஸ் போட்டும் கலாய்த்து இருந்தார்கள். இதனால் கடுப்பான விஷ்ணு மஞ்சு பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ரசிக்கக்கூடிய மீம்ஸ்களை நாங்களும் ஜாலியாகவே எடுத்துக் கொள்வோம். ஆனால், எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.

-விளம்பரம்-

கோபத்தில் விஷ்ணு மஞ்சு போட்ட பதிவு:

இனி மேல் எங்கள் குடும்பத்தைக் குறித்து யாராவது மீம்ஸ் போட்டால் அவர்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்கள் தான் இதற்கெல்லாம் பின்னால் இருக்கிறார்கள் என்று கூறி உள்ளார். இப்படி விஷ்ணு மஞ்சு சாட்டிய குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க தேர்தலில் விஷ்ணு மஞ்சுக்கு எதிராக போட்டியிட்ட பிரகாஷ்ராஜை நடிகர் சிரஞ்சீவி வெளிப்படையாக ஆதரித்தார்.

இதற்கு காரணம் ஆனவர்கள்:

அதே போல் நாகர்ஜுனாவும் பிரகாஷ்ராஜை ஆதரித்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் விஷ்ணு மஞ்சு இரு முன்னணி நடிகர்கள் என்று குறிப்பிடுவது இந்த இரு நடிகர்களை தான் என்ற பேச்சு தெலுங்கு திரை உலகில் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் மோகன்பாபு ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இருவரும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement