திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிவா – விஷ்ணுகாந்த் – சம்யுக்தா செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி.

0
1073
vishnukanth
- Advertisement -

திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பிரிந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் தனது தங்கை காதல் நிறைவேறுவதற்காக மனநிலை சரியில்லாத அண்ணனை அக்கா திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

இதனை அடுத்த கதை தான் சிப்பிக்குள் முத்து சீரியல். இந்த தொடரை விரைவாகவே முடித்து விட்டார்கள். மேலும், இந்த சீரியலில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இவர் இதற்கு முன்பே பல தொடர்களில் நடித்திருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான தொடரிலும் இவர் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் ரஜினி, கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சம்யுக்தா குறித்த தகவல்:

அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தார். இதனிடையே இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள். சம்யுக்தா வேற வேற யாரும் இல்லைங்க, அவரும் பிரபலமான சீரியல் நடிகை தான். இவர் சின்ன திரையிக்கு வருவதற்கு முன்பு youtube சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா காதல்:

அதிலும், குறிப்பாக நிறைமாத நிலவே என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் தான் சம்யுக்தா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்ன தான் இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பின்பு தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. சிப்பிக்குள் முத்து சீரியலை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும், இருவருமே தாங்கள் காதலிப்பதை குறித்து சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமணம்:

இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா பிரிவு:

அதாவது, விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகி இருக்கிறது. அதற்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். மேலும், விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு விஷ்ணுகாந்த் விரைவில் எல்லாம் தெரியவரும் என்று பதிலளித்திருக்கிறார்.

Advertisement