தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விவேக்கின் மனைவி வைத்த கோரிக்கை – என்ன கேட்டுள்ளார் பாருங்க. (செஞ்சா நல்லாத்தான் இருக்கும் )

0
505
- Advertisement -

மறைந்த சின்ன கலைவாணர் விவேக்கின் மனைவி அருட்செல்வி அவர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார். இவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்கள் முதல் தற்போதிருக்கும் இளம் நடிகர்கள் வரை என பல பேருடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் சினிமாவை தாண்டி பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவர் சுற்றுச் சூழலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர்.

- Advertisement -

விவேக்கின் கனவு:

அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

விவேக்கின் நண்பர் செல்முருகன்:

மேலும், விவேக் விட்டுச் சென்ற பணியை இன்று பல்வேறு நபர்கள் அவருக்காக மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சமூக ஆர்வம் கொண்ட விவேக்கின் இழப்பு திரைத்துறைக்கு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கு இழப்பாக கருதப்படுகிறது. கடந்த வாரம் தான் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்தது.
இதற்கு விவேக்குடன் 26 ஆண்டுகளாக பணிபுரிந்த நடிகர் செல் முருகன் அஞ்சலி செலுத்தி அற்புதமான செயலை செய்து இருந்தார்.

-விளம்பரம்-

விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம்:

விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை செல் முருகன் தொடங்கி இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வைத்துள்ளார்.

விவேக் மனைவி வைத்த கோரிக்கை:

அதில் அவர் கூறி இருப்பது, நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்க்காக விவேக் பசுமை இயக்க நிர்வாகிகள் செல் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடனிருந்தனர். தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற எதிர்ப்பார்பில் ரசிகர்களும் விவேக் குடும்பத்தினரும் உள்ளனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், விவேக் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement