இன்னிக்கி மரங்கள் கூட அழுதுகிட்டு இருக்கு – விவேக் மறைவால் கண் கலங்கி அழுத சூரி.

0
678
soori
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர்.

- Advertisement -

இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரி விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய சூரி இது ரொம்ப கொடூரமானது. அந்த மனுஷன் சினிமாவுக்கு வந்து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவர் காமெடியன் அல்ல, உண்மையான ஹீரோ. ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட விழிப்புணர்வு செய்யக் கூடியவர்.அண்ணன் விவேக் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டுமல்ல, அவர் நட்டுவைத்த கோடிக்கணக்கான மரங்கள் கூட அழுது கொண்டிருக்கும் என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement