சித்ராவை நான் வீடியோ எடுத்து மிரட்டினேனா ? முதன் முறையாக மனம் திறந்த ரக்‌ஷன்.

0
7010
rakshan
- Advertisement -

சித்ராவின் மரணத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விஜய் டிவி தொகுப்பாளரும் நடிகருமான ரக்‌ஷன் கூறியுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

வீடியோவில் 3:50 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் டிசம்பர் 15 சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர்.அதேபோல சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் சித்ரா நடித்துவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் சித்ரா இறுதியாக கலந்துகொண்ட கேளிக்கை நிகழ்ச்சி குழுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சித்ரா குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் நடிகை சித்ராவும் விஜய் டிவி தொகுப்பாளர் நடிகருமான ரக்‌ஷனுடன் ஷடேட்டிங் சென்றதாகவும் அப்போது ரக்‌ஷன் சித்ரா உடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை எடுத்து சித்ராவை மிரட்டியதாகவும் சித்ராவின் நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

வீடியோவில் 7 : 35 நிமிடத்தில் பார்க்கவும்

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, ரக்‌ஷனா இப்படி என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரக்‌ஷன், நானும் சித்ராவும் டேட்டிங் சென்றதாகவும் அவரை நான் வீடியோ எடுத்து மிரட்டியதாக வந்த செய்தி பொய்யானது. நானே சொற்ப சம்பளம் வாங்கும் ஒரு கூலி தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சித்ரா ஒரு நல்ல தோழி. நான் சித்ராவின் மரணத்திற்கு கூட சென்று இருந்தேன். அங்கே கூட எல்லாரும் ஹேமந்த்தை குறை சொல்லி எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement