விஜே சித்ரா கொலை வழக்கில் ரக்ஷனை கோர்த்துவிட்ட ஹேம்நாத் – ஆதாரங்கள் உள்ளதாக தகவல்.

0
478
raskhan
- Advertisement -

வி ஜே சித்ராவின் கொலை வழக்கில் தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை பாதித்த ஒன்று.

-விளம்பரம்-

இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு உயர்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி தனக்கென உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

- Advertisement -

சித்ரா மரணம்:

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

ஹேமநாத் அளித்த பேட்டி:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனை அடுத்து சித்ராவின் அம்மாவிடம் இது தொடர்பாக பேட்டி எடுக்கப்பட்டு இருந்தது. அதற்கு அவர் ஹேம்நாத் சொன்னது எல்லாம் பொய் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சித்ரா கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்கள்:

இந்த நிலையில் சித்ரா கொலை வழக்கு தொடர்பாக ஹேமநாத் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் சித்ரா கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கிறது. சித்ராவை ரக்சன் பல நாட்களாக தொந்தரவு செய்திருக்கிறார். ரக்சன் பற்றிய அனைத்து தகவல்களும், ஆதாரங்களும் சித்ராவின் ஆண் நண்பர் ரோகித் என்பவரிடம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

ரக்ஷன் குறித்த தகவல்:

இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து ரக்சன் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். விஜய் டிவியில் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரக்ஷன். அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் இவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement