நடிகை சித்ரா மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு ? யார் அவர்? பரபரப்பை கிளப்பிய சித்ராவின் கணவர்.

0
836
chitra
- Advertisement -

நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவன் ஹேமநாத் தெரிவித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
VJChitra

மேலும், விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா அவர்கள் சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்தார்.

- Advertisement -

சித்ராவின் மரணம்:

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க அவர் கணவர் ஹேமநாத் தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர்கள் கூறியதால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில மாதங்களுக்கு முன் தான் சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. இவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது.

chitra

சித்ரா மரணம் குறித்து எழும் கேள்வி:

ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது. மேலும், சித்ராவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் இவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவலை சித்ராவின் கணவரை ஹேம்நாத் அறிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சித்ரா மரணம் குறித்து ஹேம்நாத் அளித்த பேட்டி:

அது என்னவென்றால், நடிகர் சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கூறியிருப்பது, சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார்? என்பது பற்றிய விவரம் வெளியாகும். சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் தற்போது என் உயிருக்கும் குறி வைத்துள்ளனர்.

chitra

சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம்:

எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. உயிருக்கு பயந்து தற்போது வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன்.சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் அரசியல் அதிகாரம் மிக்கவர்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி ஹேமநாத் அளித்து இருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சித்ரா மரணம் தற்கொலை என்றிருந்த நிலையில் தற்போது அரசியல் தலைவர் தொடர்பு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement