சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மிக்கும், தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும், விவாகரத்து கேட்டு தன்னை கொடுமை படுத்தியாக ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மஹாலக்ஷ்மியா இப்படி எல்லாம் செய்துள்ளார் என்று ரசிகர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர்.
சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் பரப்பாக நடித்து வந்தார்
இதையும் பாருங்க : சாப்பாட்டிற்காக நடிகை அமலா செய்த செயல். உதவிக்கரம் நீட்டிய டி ஆர். வெளியான ரகசியம்.
மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மிக்கும் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்றும் இதனால் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜெயஸ்ரீ பேசும்போது, தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர் இவருக்கும் மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவருடன் வாழ ஆசைப்பட்டு என்னிடம் விவாகரத்து கேட்டார். ஆனால், நான் மறுத்து விட்டேன்.
அதனால் என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எனது பெண் முன்னாடியே மகாலட்சுமிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சி கொஞ்சி பேசுவார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான். அந்த பையனிடம் தன்னை ‘அப்பா’ன்னு கூப்பிட சொல்லுவார் அதை நான் கண்டித்த போது அதை பத்தி நானே கவலைப்படல அவளுக்கு என்ன என்று கூறினார் என்று பேசியுள்ளார் ஜெயஸ்ரீ. இப்படி-பட்ட நிலையில், மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் முகநூல் பக்கத்தில் கொஞ்சி பேசிய உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மஹாலக்ஷ்மி, செம டா பையா என்று கமன்ட் செய்ததற்கு ஈஸ்வர், நன்றி பப்பு என்று பதில் கொடுத்துள்ளார். ஆமா, இந்த பப்புனு இன்னொரு ஜோடி கூட கூப்பிடுவாங்க இல்ல.