நயன்தாரா அப்படி பண்ணதுல இருந்து இவ பண்ண அநியாயம் இருக்கே – மஹாலக்ஷ்மி குறித்த சீக்ரெட்டை சொன்ன ரவீந்தர்.

0
450
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த ரவீந்தர் நயன்தாராவை பார்த்து தான் தன்னுடைய மனைவி மகாலட்சுமி தாலியை வெளியில் தொங்க விட்டிருக்கிறார் என்பது போல பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த லிஸ்டில் லேட்டஸ்ட் இணைந்தது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தான்.

-விளம்பரம்-

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்பு சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.ஆனால் இந்த இரண்டு காதலும் தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போது விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தால் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

நயன் – விக்கி திருமணம் :

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது .அது மட்டுமல்லாது இவர்களுக்கு திருமணம் Neflix தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. திருமணம் முடித்த கையோடு நயன்தாரா அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். அதேபோல அவரது புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

நயனின் தாலி செண்டிமெண்ட் :

அவர் பதிவிடும் அனைத்து பதிவுகளிலும் நயன்தாரா கழுத்தில் தாலி பளிச்சென்று தெரியும் வகையில் இருக்கிறது. என்னதான் கோடி கோடியாக பணம் வைத்து இருந்தாலும் நயன்தாரா மஞ்சள் கயிறு மாற்றி தங்கச் சங்கிலியாக போடாமல் தற்போது மஞ்சள் கயிறுடனே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மணமுடித்த மகாலட்சுமி திருமணம் முடிந்த பின்னரும் நயன்தாரா போலவே தாலியை தங்க செயினில் போட்டுக் கொள்ளாமல் மஞ்சள் கயிறு உடனே இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

நயன் வரிசையில் மஹாலக்ஷ்மி :

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா போலவே மஞ்சள் கயிறு தொங்கும் தாலியை பளிச்சென்று காட்டி தன்னுடைய instagram பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் மகாலட்சுமி. இதைப் பார்த்த பலரும் நயன்தாரா ஸ்டைலை பின் தொடர்கிறீர்களா என்றும் கமெண்டுகளை போட்டு வந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இது குறித்து ரவீந்தர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் ”நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த ஒன்றரை ஆண்டுகளில் மகாலட்சுமி அவரது காதலை சொன்ன அந்த தேதியில் மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு பரிசை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் இதுவரை நான் அவருக்கு எந்த பரிசையும் வாங்கிக் கொடுக்கவில்லை.

கலாய்த்த ரவீந்தர் :

ஆனால், அப்படி வாங்கிக் கொடுத்தால் என் காதலிக்கு வாங்கி கொடுத்தது போல ஆகிவிடும் நான் யோசித்தது என்னவென்றால் அவளை திருமணம் செய்து என்னுடைய மனைவிக்கு ஏதாவது பரிசு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான், மேலும் அப்படி அவள் ஆசைப்பட்டு ஒரு பரிசு நன்றாக மஞ்சள் கயிறில் தொங்க தொங்க தாலி கட்டிக் கொள்வது தான், அதுவும் நயன்தாரா மேடம் பண்ணாலும் பண்ணாங்க இவை தொல்லை தாங்க முடியவில்லை. வீட்டில் என்னுடைய அம்மா கூட மஞ்சக்கயிறு கட்டி அதை பராமரிப்பது எல்லாம் அவ்வளவு எளிது கிடையாது தினமும் அதில் மஞ்சள் தேய்க்க வேண்டும் அதனால் செயின் வாங்கி போட்டுக்கொள் என்றார்கள். ஆனாலும் இவள் கேட்கவில்லை அவளுக்கு தாலியை விட மஞ்சக்கயிறு கட்டி கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அதை நான் செய்து விட்டேன் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார்.

Advertisement