நான் Bishave பண்ணேனா ? எதுக்கு இப்படி பழிவாங்குற எண்ணம்,கீழ்த்தனமா பண்ணாதீங்க – சம்யுக்தாவிற்கு பதிலடி கொடுத்த Vj ரவி.

0
3429
VJRavi
- Advertisement -

தன் மீது சம்யுக்தா வைத்த குற்றசாட்டுக்கு ரவி கொடுத்திருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது விஷ்ணுகாந்த்-சம்யுக்தா திருமண விஷயம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணுகாந்த், எங்களுக்கு இன்னும் விவாகரத்து எல்லாம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா திருமணம்:

மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருந்தார். அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார்.

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இடையே சர்ச்சை:

இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார். ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர்கள் தான். இவர்கள் இருவரும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட ரவி என்னை விட்டு போகாதே என்று சம்யுக்தா கண்ணீர் விட்டு அழுது இருந்தார். இது எல்லாம் வெறும் ட்ராமாவாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரவி – சம்யுக்தா உறவு:

ஒரு கட்டத்தில் சமித்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. அவர்களும் இத்தோடு ரவியை விட்டு விடு என்று கூறியிருக்கிறார்கள் ஆனால், சம்யுக்தா விஷ்ணுகாந்த் காதலிக்கும் போதே ரவியுடனும் சாட்டிங் செய்து இருக்கிறார் இது குறித்து சம்யுக்தாவிற்கும் ரவிக்கும் பொதுவான நபர் ஒருவர் சம்யுக்தாவிடம் இது குறித்து நபர் கேட்கும் ஆடியோ ஆதாரம் ஒன்றை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார். பின் இதனை ஒப்புக் கொள்ள ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவன் வாயாலே சொல்ல வேண்டும் என்பதற்காக தான் அவரிடம் பழையபடி பேசினேன் என்பதற்காக சப்பை கட்டு கட்டி இருக்கிறார் சம்யுக்தா.

ரவி பதிவிட்ட பதிவு:

இந்த ஆடியோவானது தற்போது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதற்கு முதன்முதலாக பதிலடி கொடுக்கும் வகையில் ரவி சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், லட்சக்கணக்கான ரசிகர்கள் என் மீது பாசம் வைத்திருக்கிறார்கள். அதில் நிறைய பெண் ரசிகர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு சில பேர் என்னை நேரிலும் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அதேபோல் என்னுடன் பெண்களும் பணிபுரிந்து இருக்கிறார்கள். நான் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவன். நான் எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் நல்ல முறையில் என்னை வளர்த்திருக்கிறார்கள். என்னிடம் நடிக்கும் போது பலரும் சேப்பாக தான் நினைத்திருக்கிறார்கள். ஒரு கண்டன்டுக்காக இப்படி எல்லாம் பேசுவதா? கர்மா கண்டிப்பாக பதில் சொல்லும். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement