ராஜா ராணி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலங்களின் காதல் தோல்வி ? – விஜய் டிவியில் அவரே சொன்ன விஷயம்

0
1505
riya
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷாலின் காதல் தோல்வி அடைந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்தே இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக மாறி விட்டது. இந்த தொடரில் சீரியலாக பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை, சுயமரியாதை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் பாக்கியா,கோபிக்கு விவாகரத்து கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் விவாகரத்து ஆனதை ராதிகாவிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் கோபி. ராதிகா,கோபியை திருமணம் செய்து கொள்வாரா? பாக்கியா என்ன செய்யப்போகிறார்? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷாலின் காதல் தோல்வியில் முடிவடைந்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

விஷால்-ரியா காதல்:

இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் விஷால். இவர் ராஜா ராணி 2 சீரியலில் புதிய சந்தியாவாக நடித்துக்கொண்டிருக்கும் ரியாவை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. ஆனால், இவர்கள் காதல் குறித்து இருவருமே எந்த ஒரு பதிவையும் பதிவிட வில்லை. சொல்லப்போனால், ராஜா ராணி 2 சீரியலில் ரியாவிற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு விஷால் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

விஷால் காதல் தோல்வி:

இந்த நிலையில் சமீபத்தில் விஷால் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் ராஜூ வூட்டுல பார்டி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், தான் காதலித்து வந்த பெண்ணுடன் சில வாரங்களுக்கு முன்பே பிரேக் அப் ஆகி விட்டது என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கும், ரியாவுக்கும் தான் காதல் பிரிவு ஏற்பட்டிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை இவர்கள் இருவரும் காதல் குறித்தும், பிரிவு குறித்தும் எந்த இடத்திலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement