அவரு வந்தப்ப கூட இதே கேள்விய கேட்டீங்க தான – இந்தி குறித்த கேள்வியால் கடுப்பான VJS.

0
381
- Advertisement -

ஹிந்தி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர். ஆனால், விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுகிறது.அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அதற்கு முன் இவர் ஒரு தெலுங்கு படத்தில் கூட வில்லனாக நடித்து இருந்தார். பின் கடந்த ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜவான்.

- Advertisement -

மெர்ரி கிறிஸ்மஸ் படம்:

இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெர்ரி கிறிஸ்மஸ். இந்தப் படத்தில் கத்ரீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

செய்தியாளர் கேட்ட கேள்வி:

அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்திருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம், 75 வருடம் நம்முடைய கலாச்சாரம், அரசியல் பின்னணி வந்து இந்திக்கு எதிரானது. இன்றைக்கும் இந்தி தெரியாது, போடா என்ற டி-ஷர்ட் போட்டு தான் இந்தி எதிர்த்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

விஜய் சேதுபதி கொடுத்த பதில்:

நீங்க வந்து என்று கேட்க ஆரம்பித்தார். உடனே குறிப்பிட்டு விஜய் சேதுபதி, இந்த மாதிரி கேள்வியை நீங்க ஏற்கனவே ஆமீர்கான் சார் வந்தபோது கேட்டீங்கன்னு நினைக்கிறேன். எல்லா சமயத்திலும் இந்த கேள்வியை கேக்குறீங்க. எதுக்கு இந்த கேள்வி கேட்கிறீர்கள்? என்னை மாதிரி ஆட்களிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது? என்று கேட்டார். அதற்கு அந்த செய்தியாளர், ஏன்னா, நம்ம தமிழ்நாட்டில் திருப்பி திருப்பி ஒரு விஷயத்தை சொல்கிறோம்.

ஹிந்தி குறித்து சொன்னது:

இந்தி வேண்டாம் என்றும், இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனா என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் விஜய் சேதுபதி குறுக்கிட்டு, அப்படியெல்லாம் சொல்லவே இல்லை சார். இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சார். நீங்க கேள்வியை தப்பாக கேட்கிறீர்கள். இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை படிக்காதே என்று யாரும் சொல்லவில்லை. இங்கு படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement