என்னது சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டாரா ? எச். ராஜாவின் சர்ச்சை பேச்சு. வீடியோ இதோ.

0
2646
sivakarthikeyan
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாக எச் ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.

இதையும் பாருங்க : என் அப்பா பெரிய தாதா அதனால் தான் இதே வீட்டில் இருந்துட்டேன் – எளிமையான வீட்டில் வாழ்ந்து வரும் ஷகீலா.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், தான் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் அப்பா குறித்து பேசிய வசனம் குறித்து பேசி இருந்தார். அதில், அதாவது நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தனக்கு அப்பா இல்லை என்று பேசிய வசனம் இயல்பாக வந்த வசனம்தான் என்று கூறிய சிவகார்த்திகேயன் என்னுடைய அப்பா இறந்து 18 வருடங்கள் ஆகிறது இன்றும் அவரை நினைக்காமல் வாழ்க்கை நகர்வது கிடையாது என்று உருக்கமாக கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டார் என்று எச் ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எச் ராஜா பற்றி சொல்லவா வேண்டும். இதுபோல பல்வேறு சர்ச்சை பேச்சுக்கு அவர் பெயர் போனவர்தான் என்றாலும் சமீபத்தில் இவரது பேச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,

-விளம்பரம்-

ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபனாசம் எம்.எல்.ஏ கொலை செய்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் மகன் நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயர் உண்மையில் ஜி. தாஸ் மற்றும் அவரது மரணம் இயற்கையானது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement