பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலியும் ஆர்த்தியும் வருவது போல் இன்றைய முன்னோட்ட வீடியோவில் உள்ளது. அவர்கள் இருவரும் மீண்டும் வீட்டினுள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை ஓரளவுக்கு நம்மால் யூகிக்க முடிகிறது.
ஜூலி மற்றும் ஆர்த்தி இவர்களுக்குள் ஆரம்பம் முதலே பிரச்சனைகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. அதன் காரணமாகவே இவர்களை மீண்டும் அழைத்தனர் போலும்.
ஜூலியயை முதலில் Fake(போலி) என்று கூறியவர் ஆர்த்தி தான். ஆர்த்தி வெளியேறியதற்கு முக்கிய காரணமும் ஜூலி தான்.
இவ்வாறு இருக்க இவர்கள் இருவருக்கும் இருக்கும் பகை நிச்சயம் கொழுந்துவிட்டு எரியும் என்பதை தொலைக்காட்சி நிர்வாகம் எதிர்பார்க்கும் போலும், அவ்வாறு நடந்தால் தானே தொலைக்காட்சியின் TRP ஏறும்.
ஜூலி வீட்டினுள் சென்றதை பார்வையாளர்களால் ஏற்று கொள்ள இயலவில்லை. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல பதிவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்கிடையே ஜூலிக்கும் ஆர்திக்கும் அல்லது சினேகனுக்கும் சண்டை நிச்சயம் வரலாம் !