தற்போது உள்ள நவீன உலகத்தில் அனைவருமே சமர்ட் போனை பயன்படுத்துகின்றனர். சிலர் ஆண்ட்ராய்டு போன்களையும் சிலர் ஐ போன்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த பயன்பாட்டாளர்கள் பொதுவாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி டிசம்பர் 31 பிறகு ஒரு சில os களில் வேலை செய்யாது.
2018-ம் ஆண்டு வாட்ஸ்ஆப் மூலம் போலி செய்திகள் பரவப்படுகிறது, எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்று எல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியது. அதைத் தடுக்க வாட்ஸ்ஆப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்தும் இன்னும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வாட்ஸ்ஆப் செயலியை ஜியோபோன் போன்ற Ios இயங்குதளப் பியூச்சர் போன்களிலும் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பல போன்களில் பயன்படுத்த முடியாது என்பதுதான் வருத்தமான செய்தி.
நோக்கியா S40 போனில் 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப் செயலி இயங்காது. மேலும் 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஐபோன் 7 Ios மற்றும் ஆண்டிராய்டு 2.3.7 வெர்ஸன் இருக்கும் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.