நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் நாட்டையே உளுக்கியுள்ளது. அதிலும் துபாயில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் அவரது இறப்பில் பெரும் சந்தேகம் வந்துள்ளது. ஆனால் இது கொலை அல்ல, தற்செயலாக நடந்த இறப்பு என துபாய் அரசு அறிக்கை விட்டுள்ளது.
ஆனால், தனது ஹோட்டல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி இறந்துள்ளார். மேலும், குடிபோதையில் தன்னை அறியாமல் மூழ்கி இறந்துள்ளயகாக தெரிகிறது. முதலில் மாரடைப்பு என கூறப்பட்ட இந்த இறப்பு தற்போது சற்று திசை திரும்பியுள்ளது.
அதேபோல்தான் கடந்த 20212ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகி ஒயிட்னி ஹூஸ்டன் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள பாத் டப்பில் குடி போதையில் மூழ்கி இறந்துள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி இறந்த மாதம் பிப்ரவரி, ஹூஸ்டன் இறந்த மாதம் பிப்ரவரி ,இருவருமே புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள். இதனால் இருவரது மரணமும் ஒரே மாதிரியாக,குழப்பமாகவும் உள்ளது. மேலும், சிக்கல் நிறைந்ததாக உள்ளது.